Feb 5, 2009

உலக சாதனை படைத்த முரளிதரனும், கம்பீரும்.



இன்று நான்காவது ஒரு நாள் போட்டியில் டாஸிலும் ஜெயித்துக் கொண்டிருக்கும் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இன்று சச்சினையும், ஜாகீரையும் சாப்பிட்டு விட்டு ஒய்வு எடுக்க சொல்லி அதற்கு பதிலாக ரோஹித் மற்றும் யூசுப்பின் சகோதரரையும் சேர்த்திருந்தனர்.

ஆரம்பமே அடியாக இருந்தது இந்தியாவுக்கு.

மூன்று ஓவர்களில் 14 ரன் களுக்கு முதல் விக்கெட் விழுந்தது. சேவக் 5 ரன் களில் வெளியேறினார்.

வலது இடது ஆட்டக் கார கலப்புக்காக தோனி இன்று மூன்றாவதாக இறங்கினார்.

கம்பீரும், தோனியும் சேர்ந்து விக்கெட்டுக்கு இடையே கபடி விளையாடி ரன்களை குவித்தனர்.

தோனி அடித்த 94ல் போட்டியின் தொனியே மாறிப் போனது.

கம்பீரின் கம்பீரமான ஆட்டத்தால் 147 பந்துகளில் 150 ரன்களை குவித்தார். அதில் 14 நான்குகளும் ஒரு 6ம் அடங்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

இலங்கையில் ஒரு நாள் போட்டிகளில் இது வரை அரவிந்த் டிசில்வா மற்றும் ஆண்டி ஃபிளவர் எடுத்த 145 தான் அதிக பட்சமான ஸ்கோராக இருந்தது.

இன்று கம்பீர் அதனை கடந்து உலக சாதனை புரிந்தார்.

கம்பீர் 150 ரன்களில் இருந்த போது முரளிதரன் வீசிய பந்தை மெதுவாக பாசத்துடன் தடவி சங்கககாரா கையில் கொடுக்க நடுவர் தர்ம சேனா ஒரு விரலை உயர்த்த மைதானத்தில் சத்தம் காதை பிளந்தது.

வாசிம் அக்ரமின் சாதனையை கடந்து முரளிதரன் 503 விக்கெட் எடுத்து உலக சாதனை புரிந்தார்.

அப்போது ஆடிக் கொண்டிருந்த தனது சக அணி வீரரான சுரேஷ் ரெய்னா அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார். (சென்னை சூப்பர் கிங்ஸ்)

இறுதியில் இந்தியா 323 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 

என்னதான் ஆனாலும் இந்த போட்டியிலும் இந்தியா ஜெயித்து விடும் என்று எங்கள் ஊர் டீ கடைகளிலும் சலூன்களிலும் பேசி கொண்டிருக்கின்றனர்.

1 comment:

ஆதவா said...

ஜெயிச்சாச்சுங்க

இன்னும் ஒரு போட்டிதான் பாக்கி... அதையும் நம்ம்மாளுங்க ச்ஜெயிப்பாங்க.... சீக்கிரமே ம்முதல் இடத்தில் வருவாங்க....

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...