Jul 29, 2009

சுய உருவகத்தின் மாபெரும் சக்தி..!


முதலில் சுய உருவகம் என்றால் என்ன என்பதை நான்கு வரிகளுக்கு மிகாமல் தெரிந்து கொள்வோம்.

- சுய உருவகம் என்பது ஒருவர் தன்னை பற்றி நம்பிக் கொண்டிருக்கும் நம்பிக்கைகளின் கலவை ஆகும்.
- ஒருவர் தனது சுய உருவகத்தை மாற்றுவதன் மூலம் தனது செயல்பாடுகளை திறமைகளை, ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

நம்மைப் பற்றி நாம் நினைத்துக் கொண்டிருக்கும் இந்த நம்பிக்கைகள் எப்படி உருவாயின என்று ஆராய்ந்தால் இவை நமது சொந்த நம்பிக்கைகள் அல்ல என்று தெரிய வரும்.

சமூகத்தால் திணிக்கப்பட்ட எண்ணங்களையே நமது சொந்த நம்பிக்கைகளாக நினைத்து, நமது ஆற்றல் இவ்வளவு தான் என நினைத்து வாழ்ந்து வருகிறோம்.

நமது மட்டுப்படுத்தப்பட்ட நம்பிக்கைகள் தான் நமது வெற்றியின் எல்லையை விரிவு படுத்த தடையாக இருக்கின்றன.

ஆனால் உண்மையில் எதையும் சாதிக்க வல்ல அபார ஆற்றலை நாம் கொண்டுள்ளோம் என்பதே உண்மை.

நாம் அனைவரும் சாதனையாளராக முடியும்

அதற்கு நமது மட்டுப்படுத்தப் படுத்தப்பட்ட நம்பிக்கைகளை தகர்க்க வேண்டும்!
- நமது சுய உருவகத்தை மாற்ற வேண்டும்.

சுய உருவகத்தை நாம் விரும்பும் குறிக்கோளுக்கேற்றாற்போல் விரிவு படுத்த வேண்டும்.

சுய உருவகத்தை உருவகத்தை மாற்றினால் சூப்பர் வெற்றி நிச்சயம்!

(சுய உருவகத்தை மாற்றி அமைக்கும் நடைமுறை வழிமுறையை பிரிதொரு சமயம் விவாதிப்போம்.)

Jul 27, 2009

சொற்களின் சக்தி


நாம் உச்சரிக்கும் சொற்களுக்கும் சக்தி உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

நமது சொல்களுக்கேற்றவாறு நமது உணர்வில் மாற்றம் ஏற்படுகிறது.

திரும்ப திரும்ப உச்சரிக்கப்படும் வார்த்தைகள் நமது ஆழ்மனதிற்கு சென்று மனதிற்கு தெம்பும் தைரியமும் தருகின்றது.
வேண்டிய குறிக்கோளை நோக்கி நம்மை செலுத்துகிறது. வேகமாக குறிக்கோளை அடைய துணை புரிகிறது.

மேலும் நல்ல எண்ணத்துடன் உச்சரிக்கப்படும் சொற்கள் பிரபஞ்ச மனத்தை அடைந்து எப்போதும் நமக்கு நன்மையை புரிகின்றன.

உலக மக்களுக்கு நன்மை புரிய மனவளக்கலையை அருளிய அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் உரைத்த சங்கற்பங்களில் சில:

அருட்காப்பு:

”எல்லாம் வல்ல அருள் பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமைவதாக..”


சங்கற்பம்:

“எல்லாம் வல்ல அருட்பேராற்றல் கருணையால் உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வேன்”

“ ஆறு, ஏரி, குளம், கிணறு எல்லாம் நிரம்பி வழிய, மாரி அளவாய் பொழிய, மக்கள் வளமாய் வாழ..!
வாழ்க வையகம்..வாழ்க வளமுடன்..!”

“வாழ்க வையகம்..வாழ்க வளமுடன்..!”

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...