May 14, 2021

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

 


தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள்.

தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும்.

ஞாபகசக்தி அதிகரிக்கும்.

உடல் நலமும் வாழ்க்கையில் வேண்டிய வளங்களும் உங்களை தேடிவரும்.

நீங்கள் எங்கு சென்றாலும் உங்களை சுற்றி ஒரு நல்ல அலை ஓட்டம் இருக்கும்.

அதன் மூலமாக நல்ல மனிதர்களும் நல்ல நிகழ்வுகளும் உங்களை நோக்கி ஈர்க்கப்படும்.

இது போன்ற நல்ல விஷயங்களை பெற நாம் தியானத்தை பழகுவது மிகவும் இன்றியமையாததாக உள்ளது.

ஆனால் பெரும்பாலானோர் நினைப்பது போல் தியானம் செய்யப் பழகுவது அவ்வளவு கடினமான செயல் அல்ல.

ஒரு சில நுட்பங்களை தெரிந்து கொண்டால் போதுமானது.

சரி, இப்பொழுது தியானம் எவ்வாறு எளிமையாக பழகுவது என்று பார்ப்போம்.

முதலில் ஒரு அமைதியான இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

அங்கு சென்று உங்கள் உடலுக்கு சிரமம் இல்லாதவாறு ஒரு ஏற்ற முறையில் அமர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் படுத்தாலும் தவறில்லை. ஆனால் தூங்காமல் இருப்பது நல்லது.

அடுத்தது தியானம் செய்வதற்கு முன்பாக நாம் நமது மனதின் இயல்பை பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

நமது மனம் எப்பொழுதும் தொடர்ச்சியாக எண்ணங்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கின்றது. அது மனதின் இயல்பு ஆகும். ஒரு குழந்தை இவ்வுலகில் பிறக்கும் பொழுது அதனுடைய மனம் அவ்வளவு வளர்ச்சி பெற்றதாக இல்லை. மெல்ல மெல்ல அந்த குழந்தை வளரும் போது இந்த சமுதாயம் அதனுடைய எண்ணங்களையும் தேவைகளையும் அந்த குழந்தையின் மனதில் திணிக்கிறது. அதன் மூலமாக அந்த குழந்தையின் மனம் மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்தது, இந்த சமுதாயத்தின் எண்ணங்களை உட்கொண்டதாய் இருக்கின்றது. ஆனால் பிரச்சனை எப்பொழுது தொடங்குகிறது என்றால் மனம் நமது கட்டுப்பாட்டில் இருப்பது வரைக்கும் எந்த குறையும் இருப்பது இல்லை. சில காலத்திற்கு பின்பு மனம் நம்மை கட்டுப்பாட்டில் வைக்க தொடங்குகின்றது. அப்பொழுதுதான் பிரச்சினையும் துன்பங்களும் ஆரம்பமாகின்றன.

நாம் நமது ஆளுமைத் தன்மையை இழந்து விடுகின்றோம் அந்த ஆளுமை தன்மையை மனம் எடுத்துக்கொண்டு கொள்கின்றது. மனம் நம் கட்டுப்பாட்டில் இல்லை. மனதை நமது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர மிகப்பெரிய ஒரு ஆயுதம் தேவைப்படுகின்றது. அந்த ஆயுதம் தான் தியானம். ஒருமுறை நாம் நமது மனதை கட்டுப்படுத்தும் அந்த நுட்பத்தை தெரிந்து கொண்டால் மனம் உடனே அடங்கி விடுகின்றது. நாம் சொல்லும் செயல்களை மிகவும் நேர்த்தியாகவும் திறமையாகவும் செய்து முடிக்கின்றது. அதற்கு நாம் தியானத்தை பழகுவது உடனடி அவசியமாகின்றது.

சரி இப்பொழுது மீண்டும் தியானம் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம். முதலில் சொந்தமாக ஒரு எளிதான வகையில் அமர்ந்து கொள்ளுங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை உங்கள் மனதில் தொடர்ச்சியாக ஓடும் எண்ணங்களை விழிப்புணர்வுடன் கவனித்து வாருங்கள். ஒரே விஷயம் அந்த எண்ணங்களுடன் நீங்கள் கலந்து விடக்கூடாது.

அந்த எண்ணங்களுக்கு வெளியே தனித்து நின்று அந்த எண்ணங்களை கவனியுங்கள். ஆரம்பத்தில் நீங்கள் உங்களின் ஆளுமைத் தன்மையை மறந்து அந்த எண்ணங்களுடன் கலந்து விடுவீர்கள். சில வினாடிகள், சில நிமிடங்களுக்கு பின்பு தான் உங்களுக்கு தெரியும் - நீங்கள் அந்த எண்ணங்களில் உங்களின் விழிப்புணர்வை இழந்து விட்டீர்கள் என்று. பரவாயில்லை மீண்டும் கவனிக்கத் தொடங்குங்கள் இப்படி தொடர்ச்சியாக நீங்கள் கவனிக்க கவனிக்க ஒரு கட்டத்தில் மனம் சலிப்படைந்து விடுகின்றது. அது தன்னுடைய எண்ண ஓட்டங்களை குறைக்கின்றது. எண்ண ஓட்டத்தை குறைக்க குறைக்க எண்ணங்களுக்கு இடையே சிறிய இடைவெளி ஏற்படுகின்றது. அந்த இடைவெளியை கவனியுங்கள். அந்த இடைவெளியை நன்கு உற்று நோக்கும் போது அந்த இடைவெளியில் தான் உங்களுக்கு தியானம் தென்படத் தொடங்கும். அதனைப் பிடித்துக் கொள்ளுங்கள். ந்த இடைவெளியில் ஒரு மிகப்பெரிய அமைதியை உணர்வீர்கள். ஒரு இன்பத்தை உணர்வீர்கள். அந்த அமைதி தான் தியானம். அந்த இன்பம் தான் தியானம். இதனை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்து வாருங்கள். உங்கள் மனம் உங்கள் வசப்படும்!

No comments:

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...