Feb 8, 2009

ஐ.பி.எல் : ஏலங்களும் சில ஓலங்களும்.


கோவாவில் உள்ள பனாஜியில் ஐ.பி.எல் இரண்டாவது தொடருக்கான ஏலம் நடந்து முடிந்துள்ளது.

பேசாமல் கிரிக்கெட் விளையாடி பழகியிருக்கலாம் என எல்லோரும் ஆசை படும் அளவுக்கு போட்டு தாக்கியிருக்கிறார்கள். 

2008ல் நடை பெற்ற ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் விடப் பட்ட தானை 
தலைவர் தோனி (ரூ 6 கோடி) மற்றும் சைமண்ட்ஸ் (ரூ 5.4 கோடி) யே மிஞ்சி இந்த முறை பீட்டர்சன் மற்றும் பிளிண்டாஃப் ஆகிய இருவருக்கும் யோகம் அடித்துள்ளது.

அவர்கள் இருவரும் தங்கள் ஜாதகத்தை எடுத்து பார்த்தால் ஒரு வேளை இப்போது சுக்கிர திசை நடந்து கொண்டிருக்கலாம்.

சும்மா சொல்லக் கூடாது. இருவருக்கும் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டியிருக்கிறது.

அவர்களது ஏலத் தொகையைக் கேட்டால் வடிவேலு வராமலே கண்ணை கட்டுகிறது.

இருவரும் தனித் தனியாக ரூ 7.35 கோடிகளுக்கு ஏலத்தில் எடுக்கப் பட்டிருக்கிறார்கள்.
பீட்டர்சன் பெங்களுர் ராயல் சேலன்ஜர்ஸுக்கும், பிளிண்டாஃப் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கும் எடுக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த இருவரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மேற்கிந்திய தீவுகளிடம் டெஸ்ட் தொடர் விளையாட வேண்டி உள்ளதால் ஐ.பி.எல் லின் ஆறு வார அட்டவணையில் மூன்று வாரங்கள் மட்டுமே விளையாட போகிறார்கள்.       
( கவலைப் பட வேண்டாம். அதற்கேற்றாற் போல் சம்பளம் கொஞ்சம் குறைத்து விடுவார்கள்). 

இது போக அனைத்து இங்கிலாந்து வீரர்களும் தங்களது ஏலத் தொகையில் பத்து சதவிகிதம் தங்கள் நாட்டுக்கு இந்த ஐ.பி.எல் சுற்றுக்கு விளையாட அனுமதித்ததற்காக கொடுக்க வேண்டுமாம்.

பெங்களூர் ராயல் சேலன்ஜர்ஸ் உரிமையாளர் விஜய் மல்லையா பீட்டர்ஸன்னை எப்படியும் வாங்கி விட வேண்டுமென்று வந்ததாகவும், 
அவரை வாங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறி உள்ளார்.  
வங்க தேச வீரர் மொர்டாசா ரூ.3 கோடிகளுக்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸுக்காக எடுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்த ஏலத்தில் யாரும் வாங்காமல் புறக்கணிக்கப் பட்ட வீரர்களில் ஆஸ்திரேலியாவின் ஸ்டூவர்ட் கிளாக், மெக்கெய்ன், இலங்கையின் குலசேகரா ஆகியோர் அடங்குவர்.

ஐ.பி.எல் லின் வாண வேடிக்கை விரைவில் ஆரம்பிக்க போகிறது. இப்போதே போட்டியை காண துண்டு போட்டு இடம் பிடிக்க எல்லாரும் காத்திருக்கின்றனர்.

என் நண்பன் இதைக் கேட்டதிலிருந்து, "எனக்கு வெறும் ஆயிரம் ரூபாயும், மூணு வேளை சாப்பாடும் போட்டால் போதும்... கிரிக்கெட் என்ன, கூடவே கரகாட்டம், ஒயிலாட்டம், கதகளி எல்லாம் ஆடிக் காமிப்பேன்" என்று புலம்பிக் கொண்டிருக்கிறான்.

என்ன செய்ய..?

2 comments:

radhu said...

ahaa, last para is super.....

நாமக்கல் சிபி said...

//எனக்கு வெறும் ஆயிரம் ரூபாயும், மூணு வேளை சாப்பாடும் போட்டால் போதும்... கிரிக்கெட் என்ன, கூடவே கரகாட்டம், ஒயிலாட்டம், கதகளி எல்லாம் ஆடிக் காமிப்பேன்" என்று புலம்பிக் கொண்டிருக்கிறான்.//

:))

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...