Feb 4, 2009

ஒரு நாள் தொடர் - வந்தது இந்தியா வசம்!


இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா நேற்று கைப்பற்றியுள்ளது.

மேலும் தொடர்ச்சியாக 8 ஒரு நாள் போட்டிகளில் வென்றுள்ளது உபரித் தகவல்.

சத்தியமாக இது வரை இவ்வளவு பலம் பொருந்திய இந்திய அணியை வாழ் நாளில் பார்த்தது கிடையாது.

ஒவ்வொரு வீரரும் சும்மா போட்டு தாக்குகிறார்கள்.

முன்பு அணிக்கு யாரை சேர்ப்பது என்று தவிப்பார்கள். இப்போதும் யாரை சேர்ப்பது என்ற பிரச்சனை உண்டு.

ஆனால் ஒரு வித்தியாசம் - முன்னெல்லாம் சரியான ஆள் கிடைக்காமல் தேடுவார்கள்.

இப்போது ஏகப் பட்ட அண்ணன்மார்கள் வெளியே நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். அதனால் யாருக்கு வாய்ப்பு கொடுப்பது என்று மாபெரும் குழப்பம் நிலவுகிறது.

எல்லாம் ஐ.பி.எல் லால் வந்த வினை என்று தோன்றுகிறது.

 தர்ம அடி மன்னன் சேவக், 
கச்சித ஆட்ட கம்பீர், 
ரவுண்டு கட்டி அடிக்கும் யுவராஜ், 
கவலைப் படாமல் கலக்கும் ரெய்னா, 
"எங்கிருந்துய்யா புடிச்சீங்க, இந்த ஆளை?" என எதிரணியினரரை வருந்ததுடன் கேட்க வைக்கும் யூசுப் பதான்,  
இவ்வளவு போதாது என பந்து வீச்சில் எதிரணி விக்கெட்டுக்களை வீடு கட்டி அடிக்கும் இஷாந்த்
என ஆளாளுக்கு சமயம் கிடைக்கும் போதெல்லாம் பட்டையைக் கிளப்புவதால் மொத்த அணியுமே அமர்க்களமாய் தயாராகி உள்ளது.

 தானைத் தலைவர் தோனியின் தலைமையின் கீழ் இந்தியா இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது.

இந்த நேரந்தில் 1983 ல் கபிலின் தலைமையின் கீழ் முதன் முதலாக இந்தியாவுக்கு உலகக் கோப்பையை அறிமுகம் செய்த ஜாம்பவான்களை நினைவு கூர்வோம்.

No comments:

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...