Apr 14, 2010

மனோபாவம் என்னும் மந்திரஜாலம்!


நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனோபாவம் உள்ளது.

நமது மனதின் தன்மை தான் மனோபாவம்.

ஒவ்வொருவருக்கும் இத்தன்மை வேறு படலாம்.

நம்முடைய மனோபாவம் எது என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

நாம் பெரும்பாலும் எந்த மனநிலையில் இருக்கிறோம் என்பதை வைத்து நமது மனோபாவம் அமைகிறது.

சில பேர் எப்போதும் கவலைப்படுபவர்களாகவோ, கோபப்படுபவர்களாகவோ, பயப்படுபவர்களாகவோ அல்லது தன்னம்பிக்கையின்றி சலனபுத்திக்காரர்களாகவோ இருப்பர்.

சிலர் எப்போதும் இனிய முகத்துடன் கம்பீரமாகவும், தன்னம்பிக்கையுடனும், நேர் மறையான அணுகுமுறையுடனும் இருப்பர்.

சரி, ஏன் மனிதர்க்கு மனிதர் மனோபாவம் வேறு படுகிறது?

காரணம் அவர்களின் உள்ளங்களில் அது வரை அவர்கள் கொண்டிருக்கும் எண்ணங்கள், நம்பிக்கைகள் தான்.

ஆக, நமது எண்ணங்களை மாற்றுவதன் மூலம் நமது மனோபவத்தை மாற்றிக் கொள்ள முடியும்.

மனோபாவம் மாறினால் அனைத்தும் மாறும். நமது முழு வாழ்க்கையிலும் மாற்றத்தைக் காணலாம்.

நேர்மறை மனோபாவத்துடன் எப்போதும் நாம் இருந்து வந்தால் அனைத்தும் சாத்தியம்!

ஏதாவது சூழ்நிலையில் மிகவும் கவலையாகவோ தன்னம்பிக்கையின்றியோ உணர்கிறீர்களா?

உடனே உஙகள் மனோபாவத்தை மாற்றுங்கள்! நம்பிக்கையான எண்ணஙகளை எண்ணுங்கள்.

அந்த கணமே நீங்கள் மந்திரம் போட்டது போல் சட்டென்று ஒரு தன்னம்பிக்கை கொண்ட மனிதராக மாறி விடுவீரகள்!

உங்கள் மனோபாவம் மாறிய உடன் நீஙகள் வேறு ஒரு அலை இயக்கத்தில் பிரவேசிக்கிறீரகள்!

அந்த அலை இயக்கத்தில் நுழைந்தவுடன் நீஙகள் ஒரு வித்தியாசமான ஆற்றல் மிக்க மனிதராக மாறி விடுகிறீரகள்!

உங்கள் முன்னுள்ள பிரச்சனைகள் காணாமல் போய் விடுகிறது. உங்கள் முன்னுள்ள எதிர்மறையான விஷயங்கள் காணாமல் போய் விடுகின்றன.

ஆம். அது அப்படித் தான். ஏனென்றால் எதிர் மறையான விஷயங்களின் அலை வேகமும், நேர் மறையான விஷயங்களின் அலை வேகமும் வேறு வேறு. அவை எப்போதும் பொருந்தாது.

அவை உங்களை விட்டு விலகித் தான் ஆக வேண்டும்!

உங்கள் முழு சூழ்நிலையும் மாறி விடுகிறது - நீங்கள் ஒரு ஆற்றல் மிக்க மனிதராகி விடுகிறீர்கள்!

உங்கள் இலக்கை எளிதில் அடைகிறீர்கள்!

சரியான முயற்சி இருந்தால் இது மிகவும் எளிது தான்.

ஆகவே நமது மனோபாவத்தை மாற்றுவோம் - மகத்தான வெற்றி காண்போம்!

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...