Aug 27, 2009

விரும்புவதை எளிதாக அடைய என்ன தேவை?


நாம் விரும்புவதை அடைய ஒரு எளிய வழி உள்ளது.

அந்த வழி நமது மகத்தான ஆழ்மன சக்தியின் மூலமாக விரும்புவதை அடைய துணை புரிகின்றது.

அந்த வழி என்ன என்று கேட்கிறீர்களா? நிற்க.

அது தான் சுய உருவக மாற்றம். (இப்போது உட்காரலாம்!)

நாம் இப்போது உள்ள நிலைக்கு காரணம் நாம் நம்பிக் கொண்டிருக்கும், நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் நமது சுய உருவகம் தான்.

ஆகவே இந்த தற்போதைய சுய உருவகத்தை வைத்துக் கொண்டு நமது குறிக்கோளை விரும்புவதை அடைய முடியாது.

ஏனென்றால் நமது தற்போதைய அதிர்வுக்கும், நமது குறிக்கோளுக்கான அதிர்வுக்கும் இடைவெளி உள்ளது, தொலைவு உள்ளது.

அப்படியென்றால் விரும்புவதை அடைபவர்களும், குறிக்கோளை தொடுபவர்களும் இது போல் எங்காவது மூலையில் உட்கார்ந்து கொண்டு சுய உருவகத்தை மாற்றி கொண்டு தான் சாதிக்கிறார்களா என யாராவது நண்பர்கள் பின்னூட்டத்தில் கேட்கலாம்.

விஷயமென்னவென்றால் நமது குறிக்கோளை அடைய நாம் எடுக்கும் செயல்பாடுகள் தன்னிச்சையாகவே நமது சுய உருவகத்தை மாற்றி விடுகிறது.

அதற்கு பதிலாக சுய உருவகத்தை முதலில் மாற்ற முனைந்தால் அதுவே நம்மை நம் குறிக்கோளை நோக்கி சரியான வழியில் வேகமாக செயல்பட வைக்கும்.
தகுந்த சூழ்நிலைகளையும், மனிதர்களையும் நம்மிடம் சேர்க்கும்.

நம் லட்சியத்தை எளிதாக அடைய வழி வகுக்கும்!

3 comments:

gnani said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....

நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.

எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.

ஊர் கூடி தேர் இழுப்போம்.

எப்படி பணம் அனுப்புவது ?

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. e mail: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

குப்பன்.யாஹூ said...

Gnani sir, He talks about life ambition, carrer, richness and you are talking about good cinema.
I too agree cinema is part of the life, but cinema is not the only thing in the life.

I can live with the memories of moondraam pirai, 16 vayadinile, salankai oli, Roja, sippikkul muthu, tevar magan, gunaa.

பொன் மாலை பொழுது said...

நல்ல ஒரு செய்தி. ஆனால் இன்னமும் நிறைய சொல்லியிருக்கலாம். "பட்" டென்று ஏன் முடித்து விட்டீர்கள் ?
தொடருங்கள்.

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...