May 1, 2009

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அருள் மொழிகள்

குகையிலிருக்கும் ஆன்மீக ரகசியங்கள் வெளியே பரவ வேண்டும் என்று விவேகானந்தர் கூறினார்.

அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் தியானத்தின் முழு எல்லையை தொட்டவர். 
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இல்லறத்தில் வாழ்ந்து கொண்டே காவி உடுத்தாமல், கடமைகளை துறக்காமல் உலகத்திற்கு மிக அரிதான எளிய முறை தியானத்தை பரப்பி உள்ளார்.

அருட்தந்தையின் அருள் மொழிகளில் சில:

1. எண்ணமே எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி.

2. எண்ணம் எங்கும் செல்லும் வல்லமை உடையது. விழிப்பு தவறும் போது அது அசுத்தத்திலும் செல்லும். 
தவறான எண்ணங்களை கவனமாக இருந்து தவிர்க்க வேண்டும். 
அதற்கு வழி எப்போதும் நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

3. எணணத்தை ஆராய்ச்சியிலும் தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன். மகான். ஞானி. 
எண்ணம் என்பது எப்படி இயங்குகிறது, அதிலிருந்து பல்வேறு அகக் காட்சிகள் எவ்வாறு தோன்றுகின்றன என அடிக்கடி ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் நீங்களும் அறிஞர்களாக திகழலாம்.

4. எண்ணியவெல்லாம் எண்ணியபடியாகும் எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் அமைந்திடில்.

5. உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில் உள்ளத்திலெழும் ஒழுங்கற்ற எண்ணமே 
உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்
எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயுமே.

6. இயற்கையின் சிறப்பே எண்ணமாகும். தெளிந்து திறன் பெற்ற எண்ணத்திற்கு இயற்கை ஒத்துழைக்கின்றது; கட்டுப்படுகின்றது.

7. வெற்றி வேண்டுவோர் எதிர் வரும் பிரச்சனையைப் பிரித்து அலசி ஆராய வேண்டும். நேர்முகமான துணிவான அணுகுமுறை வேண்டும்.

நன்றி - வேதாத்திரி பதிப்பகம்.

4 comments:

Anonymous said...

//எப்போதும் நல்ல எண்ணங்களை நாமே விரும்பி முயன்று மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும்.//

இவ்வாக்கியத்தை ஒவ்வொருவரும் "மகாமந்திரமா" மனதில் இருத்தி செயல் படுத்தினால் உலகமே சொர்க்கபூமி ஆகிவிடும்.

Vishnu - விஷ்ணு said...

// இயற்கையின் சிறப்பே எண்ணமாகும். தெளிந்து திறன் பெற்ற எண்ணத்திற்கு இயற்கை ஒத்துழைக்கின்றது; கட்டுப்படுகின்றது. //

எண்ணத்தை தூய்மை படுத்தினால் உயர்வு மட்டுமே உண்டு. அருமையான தொகுப்பு.

முக்கோணம் said...

நன்றி திரு. விஷ்ணு மற்றும் அனானி..

தமிழ் said...

பகிர்வுக்கு நன்றிங்க‌

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...