Jan 17, 2009

ஒரு சின்னஞ்சிறு கதை


2011ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.

அதுவும் கோப்பையை யார் வெல்வார்கள் என்பது கடைசி பந்து வரை யாரலும் தீர்மானிக்க முடியாமல் போட்டி மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியிருந்தது.

கடைசி ஓவரின் கடைசி பந்து. தேவை மூன்று ரன்கள். இந்தியாவின் கையில் ஒரே விக்கெட் மட்டுமே பாக்கி இருந்தது.

டெண்டுல்கர் மட்டும் விக்கெட்டை இழக்காமல் ஒரு புறம் ஆடிக் கொண்டிருந்தார்.


கடைசி பந்தை டெண்டுல்கர் சந்திக்க தயாரானார்.

உலகக் கோப்பையை யார் கைப்பற்ற போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் கடைசி பந்து!

பிரட்லீ பந்தை கையிலெடுத்து ஓடி வர தொடங்கினார்.

வீடுகளில் தொலைக்காட்சியில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் நாற்காலியின் நுனிக்கே வந்து விட்டனர்.

நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கை நகங்கள் அனைத்தையும் சுத்தமாக முடித்திருந்தனர். சில பேர் கால் நகத்தை கூட கடிக்க முற்படுமளவுக்கு போட்டி விறுவிறுப்பின் உச்ச கட்டத்தை எட்டியிருந்தது.

பிரட்லீ ஓடி வந்து மிகவும் சாதுரியமாக ஆஃப் ஸ்டம்பை குறி வைத்து போட்டார்.

பந்து சிறிதளவு பௌன்சர் ஆனது.

தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த யாரும் கண்ணை சிமிட்டவில்லை.

அந்த பந்தை டெண்டுல்கர் சிறிது குதித்து தேர்ட் மேன் திசையில் தட்டி விட்டார். அங்கு ஃபீல்டர்கள் யாரும் இல்லாததால் சுலபமாக இரண்டு ரன்களை பெற முடிந்தது.

மூன்றாவது ரன்னுக்கு ஓட முயலும் போது மிட் விக்கெட்டில் இருந்த ஃபீல்டர் ஓடி வந்து பந்தை எடுத்து விக்கெட் கீப்பரிடம் வீசினார்.

விக்கெட் கீப்பர் பந்தை எடுத்து விக்கெட்டை வீழ்த்துவதும், இந்திய வீரர் மூன்றாவது ரன்னை அடைவதும் ஒரே சமயத்தில் நடந்தது.

ஆஸ்திரேலிய அணியினர் "அவுட்..!!" என கூக்குரலிட்டு அம்பயரிடம் அப்பீல் செய்தனர்.

அம்பயருக்கே குழப்பமாக இருந்தது.

தேர்ட் அம்பயரை கேட்டார்.

இந்திய வீரர் ரன்னை அடைவதும், ஸ்டம்பிங்க்கும் ஒரே சமயத்தில் நிகழ்ந்ததால் தேர்ட் அம்பயரும் திணறினார்.

தொலைக் காட்சியில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் உறைந்து போய் அமர்ந்திருந்தனர்.

தேர்ட் அம்பயர் மீண்டும் மீண்டும் ரீப்ளே செய்து பார்த்தார். நேரம் ஓடிக் கொண்டிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன் படுத்திக் கொண்ட தொலைக் காட்சி சானல் உடனடியாக விளம்பரங்களை போட ஆரம்பித்தது.

No comments:

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...