Oct 6, 2009

மனதைப் பழக்கினால் மகத்தான வெற்றி!!


தலைப்பைப் படித்தவுடன் யாருக்காவது தோன்றலாம்:

'ஆமாம்..அவனவன் அலைஞ்சு திரிஞ்சு உழைச்சு முயற்சி பண்ணினாலே ஜெயிக்கறதுக்கு எவ்வளவு பாடு பட வேண்டியிருக்கு..இவரு மைனர் மாதிரி உக்காந்துட்டு மனசைப் பழக்குவாராம்..அப்படியே வெற்றியெல்லாம் வந்து குவியுமாம்..போய் பொளப்பப் பாருங்கய்யா..'

கண்டிப்பாக உழைப்புக்கு வெற்றியுண்டு தான்.

ஆனால் நாம் நமது மனதைப் பழக்கும் போது நமது எண்ண ஆற்றல் நம்மை உந்தி சரியான திசையில், சரியான முறையில் செயல்பட வைத்து வெற்றியை தேடித் தரும் என்பதே உண்மை.

சரி, நமது குறிக்கோளை அடைய மனதைப் பழக்க என்ன செய்ய வேண்டும்?

மிகவும் எளிது. இரண்டு விஷயங்களை செய்தால் போதும்.

1. நமக்கு எதை விரும்புகிறோமோ, எதை சாதிக்க நினைக்கிறோமோ அதை மட்டும் நினைக்க வேண்டும்.
2. எது வேண்டாமோ அதை நினைக்க கூடாது.

நமது இப்போது உள்ள நிலையை பொருட்படுத்தாமல் நமது குறிக்கோளுக்கு ஒத்த எண்ணங்களை நினைக்க வேண்டும்.

இதன் மூலம் நமது மனம் நமது செயல் திறனை கூட்டி, நம்மை குறிக்கோளை நோக்கி சரியான திசையில் இட்டு செல்லும்.

நாம் வெற்றி பெற நமக்கு சரியான சிந்தனைகளை அவ்வப்போது சொல்லும்.

மேலும் சரியான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் கொண்டு வந்து சேர்க்கும்.

நாம் என்ன எண்ணுகிறோமோ அதைத் தான் பெறுவோம்.

ஆகவே மனதைப் பழக்கினால் மகத்தான வெற்றி நிச்சயம்!

No comments:

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...