Feb 3, 2009

மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட்: அதிரடி சேவக்கும் சூப்பர் யுவராஜும்.

இன்றைய இந்திய இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் அதிரடி மன்னன் சேவக் வழக்கம் போல் தனது தர்ம அடியின் மூலம் வெறும் 75 பந்துகளில் செஞ்சுரி அடித்தார்.

இன்றைய இந்திய ஆட்டத்தில் வீரேந்திரர் பின்னிய 116ம் (90 பந்துகள்) அண்ணன் யுவராஜ் எடுத்த 117ம் (95 பந்துகள்) அசாதாரணமானவை.

24 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்த போது இருவரும் சேர்ந்து அணியை கரை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல் டெண்டுல்கர் ஆட்டமிழந்ததும் கம்பீர் ஆட்டமிழந்ததும் கூட குறிப்பிடத் தக்கது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக சச்சின் (7) L.B.W வில் ஆட்டமிழந்தார்.

பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்றது போல் இருந்தது.

டெண்டுல்கரின் அவுட்டின் போது பெவிலியனில் யுவராஜ்சிங் வருத்தப் பட்டதை காண முடிந்தது.

பிறகு யுவராஜ் சிங் நூறு அடித்த போது பெவிலியனில் இருந்த டெண்டுல்கரை நோக்கி ஆர்ப்பரித்து சைகை செய்ததும் பதிலுக்கு டெண்டுல்கர் உற்சாகத்தில் கை அசைத்து எதையோ சொல்லியதையும் கண்டிப்பாக கூறியாக வேண்டும்.

கம்பீரின் அவுட் (10) சிறிதும் எதிர் பாராதது.

ஃபெர்னாண்டோவின் பந்தை சேவக் நேராக அடிக்க அது பவுலரின் கையில் பட்டு ஸ்டம்பில் மோத கம்பீர் அவுட்.

ஏழாவது விக்கெட்டுக்கு வந்த யூசுப் பதான் அந்த அடி அடிப்பார் என ஐ.பி.எல். பார்க்காத யாரும் நம்ப மாட்டார்கள்.

வழக்கம் போல் தலைவர் 38 பந்துகளில் 59 ரன் கள் அடித்து தர்ம அடி மன்னனாக விளங்கினார்.

இறுதியில் இந்தியா 147 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்று தொடரை கைப்பற்றியதும், ஆட்ட நாயகன் விருது யுவராஜ் சிங்கிற்கும் வழங்கப் பட்டது குறிப்பிடத் தக்கது. 
 

No comments:

தியானம் எளிமையாக பழகுவது எப்படி?

  தியானத்தின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . தியானத்தின் மூலமாக மன ஒருமைப்பாடு மற்றும் மன அமைதி ஏற்படும் . ...